Published : 10,Feb 2021 11:36 AM
"அப்போதே சொன்னேன் கேட்டீங்களா"- இந்தியாவை சீண்டிய பீட்டர்சன்!

ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றியை கொண்டாட வேண்டாம் என்று அப்போதே நான் சொன்னேன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி வரும் 13-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
India , yaad hai maine pehele hi chetawani di thi ke itna jasn na manaye jab aapne Australia ko unke ghar pe haraya tha ?
— Kevin Pietersen? (@KP24) February 9, 2021
இந்நிலையில், இந்திய அணியின் தோல்வியை கேலி செய்யும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில் "ஆஸ்திரேலியாவை அந்த நாட்டில் தோற்கடித்தபோது நிறைய கொண்டாட வேண்டாம் என நான் எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா இந்தியா" என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை அவர் இந்தியில் வெளியிட்டுள்ளார்.