சென்னை அருகே மருந்து சீட்டு இல்லாமல் போதைக்காக இலவச மாத்திரை கேட்ட நபருக்கு மாத்திரை தராததால் மருந்தக உரிமையாளரை தக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை தாம்பரத்தை அடுத்த கடப்பேரியில் சாய்ராம் மெடிகல்ஸ் என்ற பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வருபவர் தினேஷ் குமார் (28), இந்நிலையில் இவரது கடைக்கு வந்த நபர் போதைக்காக சில மாத்திரைகளை மருந்துச் சீட்டு இல்லாமல் இலவசமாகவும் கேட்டுள்ளார்.
மருந்தக உரிமையாளர் போதைக்கு மாத்திரையை தராததால் ஆத்திரத்தில் சென்ற நபர் அவரது நண்பரை அழைத்து வந்து மருந்தக உரிமையாளரை அடையாளம் காட்டிவிட்டு சென்றுள்ளார். அவரும் மருந்தக உரிமையாளரை இரும்பு கம்பியால் சரமாறியாக தாக்கி இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது பொதுமக்கள் அவரை பிடித்து தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் மருந்தக உரிமையாளரை தாக்கியது பம்மல் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான கோபி (எ) கோபிநாத் (25), என்பதும் இவரது நண்பர் நெடுங்குன்றத்தை சேர்ந்த பரத் என்பவர் மருந்தகத்தில் போதைக்காக மாத்திரை கேட்டு தராததால் அவரது சிறை நண்பரான கோபிநாத்திடம் கடை உரிமையாளரை அடிக்கும் படி சொல்லியுள்ளார். அதன் காரணமாக கோபிநாத் மருந்தக உரிமையாளரை தாக்கி, இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் 294(டி), 384, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!