இந்திய அணியில் எனக்கான இடம் எப்போதும் இருக்கும், எனவே அது குறித்து எனக்கு கவலையில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்து விட்டு, டெஸ்ட் தொடரை வென்று திரும்பிய ரஹானேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மனம்திறந்து பேசியுள்ளார் ரஹானே அதில் " இந்திய டெஸ்ட் அணிக்கு விராட் கோலி தான் கேப்டனாக இருப்பார். நான் அவரது துணை கேப்டனாக இருப்பேன். அவர் இல்லாத சூழ்நிலையில் இந்திய அணியை வழிநடத்துவது எனது பணி.அப்போது இந்திய அணியின் வெற்றிக்காக சிறந்த கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்த வேண்டியது எனது பொறுப்பு" என்றார்.
மேலும் " கோலியுடனான எனது உறவு எப்போதுமே சுமுகமாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய தொடரில் எனது பேட்டிங்கை அவர் பாராட்டியுள்ளார். இருவருமே இந்திய அணிக்காக உள்நாட்டிலும், அந்நிய மண்ணிலும் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடியுள்ளோம். அதனாலேயே பேட்டிங்கில் அவா் 4-ஆவது வீரராகவும், நான் 5-ஆவது வீரராகவும் இறங்குகிறோம். களத்தில் எதிரணி பௌலிங் குறித்து பகிர்ந்துகொள்வோம். பேட்டிங்கிற்கு தேவையான எச்சரிப்போம்" என்றார் ரஹானே.
தொடர்ந்து பேசிய அவர் " கேப்டனாக இருப்பது பெரிய விஷயமல்ல. அந்தப் பொறுப்பில் இருந்துகொண்டு நாம் எவ்வாறு செயலாற்றுகிறோம் என்பதே முக்கியமானது. அந்த வகையில் இதுவரை வெற்றிகரமாக செயல்பட்டு வந்திருக்கிறேன். இனியும் அப்படியே செயலாற்றுவேன் என நம்புகிறேன். ஒரு நல்ல கேப்டனை உருவாக்குவது அணியின் அனைத்து வீரா்களே. ஆஸ்திரேலிய தொடரின் வெற்றி அணியினருக்கு கிடைத்த வெற்றியே. உண்மையில் இந்திய அணியில் எனக்கான இடம் ஆபத்தில் இருப்பதாக எப்போதுமே நான் உணா்ந்ததில்லை" என்றார் ரஹானே.
Loading More post
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்