Published : 19,Jan 2021 06:13 PM
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை

அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் புதன்கிழமை யு.எஸ் கேப்பிடலில் பதவியேற்கவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பதவியேற்பின் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் சற்றே விரிவாகப் பார்ப்போம்.
முதல் அதிபர் பதவியேற்பு எப்போது?
1789-ஆம் ஆண்டில், அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் நியூயார்க்கில் உள்ள பெடரல் ஹாலில் ஒரு பால்கனியில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அரசியலமைப்பின் இரண்டாம் பிரிவு வழங்கிய எளிய உறுதிமொழி உடன் கூடிய அசல் பதவியேற்பு இது என்று இப்போதும் அமெரிக்கர்களால் கூறப்படுகிறது. இதன்பின் பதவியேற்புகள் நவீனம் மற்றும் அதிக ஆடம்பரத்துடன் நடக்கத் தொடங்கின. சமீப ஆண்டுகால பதவியேற்பு விழாக்கள் பெரும்பாலும் யு.எஸ். கேபிட்டலில் கட்டப்பட்ட தொடக்க தளத்தில் நடந்து வருகின்றன.
பதவியேற்பு விழாவின் இன்னொரு முக்கிய அம்சம், அதிபர் நிகழ்த்த உள்ள தொடக்க உரை. அதிபர்களின் தொடக்க உரை பெரும்பாலும், பிரசாரத்தின்போது கூறப்பட்ட வாக்குறுதிகளை பிரதிபலிக்கும் வகையில் அமையும். பெரும்பாலும், புதிய அதிபர்கள் பதவிக்கான தங்கள் திட்டங்களை வகுப்பதில் கவனம் செலுத்துவார்கள். மேலும், அவர்கள் விரைவாக கவனம் செலுத்தவேண்டும் என்று அவர்கள் நம்புகின்ற பிரச்னைகளை தொடக்க உரைகளில் கவனம் செலுத்துவார்கள்.
ஜோ பைடன் தனது பிரசார உரைகளில் `அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்பதல்' என்ற முழக்கத்தை முன்வைத்திருந்தார். அதன்படி, தேசத்தில் நிகழ்ந்துள்ள பிளவுகளைத் தடுப்பதற்கான முக்கியத்துவத்தையும் கருத்தில்கொண்டு, அவர் ஒன்றிணைக்கும் திட்டங்களில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசம் எதிர்கொள்ளும் தற்போதைய பெரிய பிரச்னைகளை, குறிப்பாக தொற்றுநோய்களைப் புரிந்துகொள்வதற்கான தனது திட்டங்களை அவர் முன்வைப்பார் என்றும், சமூகத்தில் அப்பட்டமான அரசியல் பிளவுகளை சமரசம் செய்வதற்கான ஒரு நம்பிக்கையான திட்டத்தை வகுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எவ்வளவு முக்கியமானது?
தொடக்க உரையும் பதவியேற்பும் முக்கியமானவை என்றாலும், அவை புதிய நிர்வாகத்தின் தொனியை வரையறுக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த மையச் செயல் அல்ல. பல சந்தர்ப்பங்களில், அதிபரின் முதல் 100 நாட்களில் அதிபர் எடுக்கும் நடவடிக்கைகள் பெரும்பாலும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, அவர்கள் வெளியிடும் ஆரம்ப நிர்வாக உத்தரவுகள், அவர்கள் வெற்றிபெற முயற்சிக்கும் ஆரம்பகால சட்டம் மற்றும் பிற பயணங்கள் மற்றும் உரைகள் தொடக்க உரைகளை விட அமெரிக்கர்களால் பெரும்பாலும் நினைவில் வைக்கப்படுகின்றன.
அதிபர் பதவியேற்பு விழாவை ஏற்பாடு செய்து நிர்வகிப்பது யார்?
பதவியேற்க உள்ள அதிபர்கள் ஒரு தொடக்கக் குழுவை அமைத்து, விழாவை மட்டுமல்லாமல், விழாவைச் சுற்றியுள்ள பல நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கின்றனர். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாறுதல் செயல்முறையை நிர்வகித்து, அவர்களின் அமைச்சரவையையும் நிர்வாகத்தையும் கட்டமைக்க வேண்டும். இதனால், அதிபரின் தொடக்கக் குழு, நன்கொடைகள் மூலம் நிதியளிக்கப்பட்டு, பதவியேற்பைச் சுற்றியுள்ள அனைத்து நிகழ்வுகளையும் தனித்தனியாக நிர்வகிக்கும் பணியில் ஈடுபடுகிறது. இந்தக் குழுவை தேர்ந்தெடுப்பவர் அதிபராக இருந்தாலும், அவரும், அவரது நெருங்கிய ஆலோசகர்கள் பெரும்பாலும் இந்தப் பணிகளில் நெருக்கமாக ஈடுபடுவதில்லை. பதவியேற்பு விழா நடைபெறும் கேபிட்டலின் தொடக்கத் தளம் கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டு கட்டப்படுகிறது.
இதேபோல் கமலா ஹாரிஸ் துணை அதிபராக நாளை பதவியேற்கும் நிகழ்வு, கடந்த காலங்களில் துணை அதிபராக பதவியேற்ற நிகழ்வை விட அதிக கவனத்தைப் பெறும். காரணம், முதல் பெண் துணை அதிபர் பதவியில் கமலா ஹாரிஸ். அதேபோல் இந்தப் பதவியை வகிக்கப்போகும் முதல் ஆசிய-அமெரிக்க அல்லது ஆப்பிரிக்க-அமெரிக்கர். எனவே, சத்தியப்பிரமாண நிகழ்வு வழக்கத்தை விட அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
பலர் அறிந்திருக்காத ஒரு சிக்கல்!
அரசியலமைப்பின் பிரிவு II-ன் தொகுதி I-இல் பதவிப் பிரமாணம் மிகவும் கவனமாக எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் அரசியலமைப்பு குறிப்பிடப்பட்டுள்ள சொற்கள் உச்சரிக்கப்படுவதில் கவனம் அவசியம். பராக் ஒபாமா ஜனவரி 20, 2009 அன்று பதவியேற்றபோது, தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் ஒபாமாவிடம், ``நான் அமெரிக்காவின் அதிபர் பதவியை உண்மையாக நிறைவேற்றுவேன்" என்று கூறச் சொல்லி கேட்க, அதற்கு பதிலாக ``அமெரிக்காவின் அதிபர் பதவியை நான் உண்மையாக நிறைவேற்றுவேன்" என்று கூறினார் ஒபாமா. இது சொற்களில் மிகச் சிறிய மாற்றமாக இருந்தாலும் தலைமை நீதிபதி ராபர்ட்ஸ், அதிபர் ஒபாமாவை மீண்டும் உறுதிமொழி எடுக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பைடனின் பதவியேற்பு விழா முந்தைய அதிபர்களின் பதவியேற்பு விழாவிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஜனவரி 6-ஆம் தேதி கேபிட்டல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து கொரோனா உள்ளிட்ட எதிர்மறைக் காரணங்களால் விழா கவனத்துக்குளாகியுள்ளது. தொற்றுநோய் மற்றும் வன்முறை தாக்குதல் இரண்டும் தொடக்க விழாவின் தொனியை மாற்றிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மலையரசு