கொரோனா பொது முடக்க காலத்தில் புகையிலை பொருட்கள் கிடைப்பதில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Tobacco Cessation Clinic என்ற அமைப்பு பொது முடக்க காலத்தில் புகையிலை புழக்கம் தமிழகத்தில் எவ்வாறு இருந்தது என்ற ஆய்வை புகையிலை பொருள்களை பயன்படுத்துவோரிடம் மேற்கொண்டது. அதில் 60 சதவிதம் பேர் பொது முடக்க காலத்தில் புகையிலை பொருள்கள் எளிதாக கிடைத்தது என்று தெரிவித்துள்ளனர். கொரோனா பொது முடக்க காலம் மார்ச் இறுதியில் இருந்து மே மாதம் வரை மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டது.
அப்போதைய காலக்கட்டத்தில் பல கடைகள் குறிப்பிட்ட சில நேரத்தில் மட்டுமே திறக்கப்பட்டது. இதனால் புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் விற்பனை சரியும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 60 சதவிதம் பேர் புகையிலை பொருள்கள் கிடைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். இதில் மூன்றில் ஒரு சதவிதம் பேர் தாங்கள் வழக்கமாக புகையிலை பொருள்களை வாங்கும் கடைகளில் மொத்தமாக வாங்கி வைத்து பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
அதில் 6 சதவிதத்தினர் மட்டுமே தினசரி கடைகளுக்கு சென்று புகையிலை பொருள்களை வாங்கும் வழக்கத்தை பொது முடக்க காலத்தில் மேற்கொண்டிருந்தனர். மேலும் 38 சதவிதம் பேர் பொது முடக்க காலத்தை பயன்படுத்தி புகையிலை பொருள்களை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். மேலும் சிலர் பொது முடக்கத்தின் சில நாள்கள் மட்டும் புகையிலையை பயன்படுத்தாமல் தவிர்த்து பின்பு மீண்டும் பயன்படுத்தியதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!