ராஞ்சியிலிருந்து புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள முன்டா விமான நிலையத்திலிருந்து 174 பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பறவை ஒன்று விமானத்தின் என்ஜின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், டர்பைனின் பிளேடுகள் சேதமடைந்ததுடன், புகை வந்துள்ளது. இதையடுத்து, அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் 174 பேரும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர். இந்த சம்பவத்தால் பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர் ஏசியா விமானம் தரையிறங்கும்போது பயணி ஒருவர் திடீரென அவசரமாக கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்