
கோவையில் மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில் கணவன் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கோவையை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது மனைவியை பிரசவத்திற்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி அவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாகவே சில கவலையுடன் ரமேஷ் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அவரது நண்பருடன் கழிவறைக்கு சென்ற அவர், மருத்துவமனையில் கழிவறைக்கு அருகே உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவரை காணவில்லை என அவரது உறவினர்கள தேடியபோது அங்கு தூக்கி மாட்டி தற்கொலை செய்து கொண்டது ரமேஷ் என தெரிய வந்தது.
மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில் ரமேஷ் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பந்தய சாலை காவல் துறையினர் உடனடியாக அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.