பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்களில் 100% ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தியேட்டர்களில் 100% இருக்கைகள் அனுமதி குறித்து தமிழக அரசிடம் விரிவான விளக்கம் பெற்று ஜன.11ம் தேதி தரவேண்டும் எனவும், அதுவரை தியேட்டர்களில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கபப்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றமும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறது. அதில், ’’கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தியேட்டர்கள் விவகாரத்தில் குழந்தைகள் போல அரசு மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கவேண்டும். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி ஜனவரி 11 ஆம் தேதி வரை தியேட்டர்கள் 50% ரசிகர்கள் அனுமதியுடன்தான் இயங்கவேண்டும்’’ என்று கூறியிருக்கிறது.
மேலும் இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் உயர் நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி