முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான கிணற்றிலிருந்து 90 நாட்களுக்கு நீரைப் பயன்படுத்திக் கொள்ள அவர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான தோட்டத்திலிருக்கும் கிணற்றால் தங்களது குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, கடந்த 20 நாட்களாக கிராம மக்கள் போராடி வந்தனர். பிரச்னைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக கிராம மக்களுடன் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேற்றிரவு தேனி சுற்றுலா மாளிகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில், தனது கிணற்று நீரை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் புதிய குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கிராம மக்களிடம் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். இதன் விளைவாக லட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டுள்ளனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்