வேலை போய்விடுமோ என்ற கவலையில் மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில் மென்பொருள் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் கோபி கிருஷ்ண துர்கா பிரசாத். ஐடி ஊழியரான அவர், கடந்த 3 தினங்களுக்கு முன்புதான், புனேவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். இந்நிலையில், நான்காவது மாடியில் இருந்து குதித்து துர்காபிரசாத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவர் எழுதிய கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், ஐடி துறையில் பணிப்பாதுகாப்பு இல்லாததால், தன்னுடைய குடும்பத்தைப் பற்றி கவலையடைந்துள்ளதாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாகவே ஐடி நிறுவனங்களில் எவ்வளவு பெரிய பொறுப்பில் பணியாற்றினாலும் பணிநீக்கம் என்பது இன்றைய காலத்தில் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில் பணிநீக்கம் குறித்த பயத்தால் புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!