பனாமா ரகசிய ஆவணங்கள் வெளியான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்திருக்கிறது.
இதையடுத்து தனது கேபினட் சகாக்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். பதவியில் தொடருவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதுடன், வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷரீப் மற்றும் பிரதமரின் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு அமைச்சரவையைக் கூட்டுவது என நவாஸ் ஷெரீப் முடிவெடுத்திருக்கிறார். முன்னதாக பனாமா ஆவணங்கள் தொடர்பான கூட்டு விசாரணைக் குழுவின் அறிக்கையில் நவாஸ் ஷெரீப் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்