"எங்களைப் போன்ற பெண்களெல்லாம் இன்று முன்னுரிமை பெற்றிருக்கிறோம் என்றால், அதற்கு அன்று பாரதியார் பாடிய பெண்ணுரிமைதான் காரணம்" என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் 139-வது பிறந்தநாளை இன்று அனைத்து தரப்பினரும் கொண்டாடி வரும் நிலையில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பாரதியாரின் உருவப் படத்திற்கு மலர்கள்தூவி மரியாதை செலுத்தியது, பாரதியார் வேடமிட்ட குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பாரதியாரின் நினைவைப் போற்றியுள்ளார்.
இந்திய சுதந்திரத்திற்காகவும் பெண்கள் உரிமைகளுக்காகவும் தனது கவிதைகளால் போராடியவர் பாரதியார். செய்யுள் வடிவில் இருந்த கவிதைகளை அனைவருக்கும் புரியும்படி எழுதி விடுதலையுணர்வை ஊட்டியதில் இவரது எழுத்துக்கு முக்கியப் பங்குண்டு.
தமிழகத்தின் பெருமை என்று கொண்டாடப்படும் பாரதியார் 1982 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இதே டிசம்பர் 11 ஆம் தேதிதான் பிறந்தார். அவரது, 139-வது பிறந்தநாளைக் தமிழகம் முழுவதும் கொண்டாடி வரும் வேளையில், தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர். தமிழிசை செளந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
எங்களைப் போன்ற பெண்களெல்லாம் இன்று முன்னுரிமை பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு அன்று மகாகவி பாரதியார் பாடிய பெண்ணுரிமைதான் காரணம்... மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தில் அவர்தம் நினைவை போற்றுவோம்...#bharathiyar pic.twitter.com/3hP7BXPkXS — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 11, 2020
”எங்களைப் போன்ற பெண்களெல்லாம் இன்று முன்னுரிமை பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு அன்று மகாகவி பாரதியார் பாடிய பெண்ணுரிமைதான் காரணம்... மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தில் அவர்தம் நினைவை போற்றுவோம்” என்று பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்