மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமாக இருந்த சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்பட்டது குறித்து பதிலளிக்க பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் நடூர் பகுதி ஆதிதிராவிடன் காலனியில் தனியாருக்கு சொந்தமான சுற்றுச்சுவர் சரிந்து அருகில் இருந்த 5 வீடுகளின் மீது விழுந்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அதேபகுதியில் மீண்டும் சுவர் கட்டப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. கடந்த 2-ஆம் தேதி ஒரு வருட நினைவஞ்சலி செலுத்தும்போது இந்த சுவர் அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மீண்டும் மண் அரிப்பு ஏற்படாத வகையில், கான்கிரீட் சுவர் கட்டப்பட்டுள்ளதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து இதுகுறித்து பட்டியலினத்தோர் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில், சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்பட்டது குறித்து பதிலளிக்க பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் 15 நாட்களில் பதில் அளிக்கக்கோரி தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!