நியூசிலாந்துக்காக விளையாட சூர்யகுமார் யாதவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டபோதும் அவருக்கு பக்கபலமாக நின்று பிசிசிஐ போகவிடாமல் செய்தது ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அப்படியில்லாமல் சொந்த வீரர்கள் மீது அக்கறையில்லாமல் இருக்கிறது என்று முன்னாள் வீரர் டானிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் "பாகிஸ்தான் கிரிக்கெட் பல இளம் வீரர்களை இழந்து வருகிறது. 24 வயதான சமி அஸ்லாம் பாகிஸ்தானுக்காக 13 டெஸ்ட், 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அவர் தொடர்ந்து சிறப்பாகவும் விளையாடினார். ஆனால் அவருக்கு அநியாயம் இழைக்கப்பட்டது. அவருக்கு ஷான் மசூத், இமாம் உல் ஹக் போல வாய்ப்பு வழங்கப்படவில்லை" என்றார்.
மேலும் பேசிய அவர் "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய வீரர்களை தக்க வைக்க முயலாமல் நாட்டைவிட்டு சென்றால்போதும் என நினைக்கிறது. சூர்யகுமார் யாதவ்க்கு நியூசிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிஸ் தங்கள் நாட்டுக்காக விளையாட வருமாறு அழைப்புவிடுத்தார். ஆனால், பிசிசிஐ பக்கபலமாக நின்று அவர் இந்தியாவை விட்டு செல்லாத வகையில் பார்த்துக்கொண்டது" என்றார் டானிஷ் கனேரியா.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி