நேரத்திற்கு சமைக்காததால் மனைவியை கொன்ற கணவர் - தெலங்கானவில் பயங்கரம்

நேரத்திற்கு சமைக்காததால் மனைவியை கொன்ற கணவர் - தெலங்கானவில் பயங்கரம்
நேரத்திற்கு சமைக்காததால் மனைவியை கொன்ற கணவர் - தெலங்கானவில் பயங்கரம்

தெலங்கானா மாநிலம் மீர்பேட் பகுதியை சேர்ந்த 45 வயதான லாரி டிரைவர் ஸ்ரீனு தனது மனைவி நேரத்திற்கு சமைக்காததால் கோவத்தில் புடவையால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலையாளி ஸ்ரீனுக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. 

கடந்த வெள்ளி அன்று ஸ்ரீனுவின் மனைவியும், மகனும் விஷேஷத்திற்கு சென்று வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ஸ்ரீனு தனது மனைவி ஜெயம்மாவை (40 வயது) சமையல் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து உணவு எதுவும் தயார் செய்யாமல் இருப்பதை கவனித்த ஸ்ரீனு மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது கோவத்தில் மனைவியின் கழுத்தை புடவையால் நெரித்து கொலை செய்துள்ளார். 

சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார் அவர். ஸ்ரீனுவின் மகன் தான் தனது அம்மா பேச்சு மூச்சற்று தரையில் வீழ்ந்திருப்பதை பார்த்து  அக்கம் பக்கத்தினருக்கு தகவல் சொல்லியுள்ளான். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தேடி ஸ்ரீனுவை தேடி வருகின்றனர். இதே போல மஹாராஷ்டிராவில் மகன் ஒருவர் தந்து தந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com