அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினி வெளியிடுவார் என அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி தொடங்கினால் சாதக பாதககங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார் ரஜினி. கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பாக பரப்புரை மெற்கொள்வது குறித்தும் அவர் கேட்டறிந்துள்ளார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கட்சி ஆரம்பித்தால் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு மண்டபத்தின் பால்கனியில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் கையசைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் “இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினி முடிவை அறிவிப்பார். அவர் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதை வரவேற்போம். அது எங்களுக்கு மகிழ்ச்சியே” எனத் தெரிவித்தனர்.
Loading More post
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்