ஆன்லைன் படிப்புக்கு புதிய மொபைல் வாங்க டீ விற்பனை செய்து பணம் சேர்க்கும் 8ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் ராகுல். இவன் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறான். இந்நிலையில், கொரோனா பொதுமுடக்கத்தால் தந்தைக்கு வேலை இல்லாமல் இருந்ததால் எல்லா நடுத்தர குடும்பமும் சந்தித்த பொருளாதார சிரமத்தை சிறுவனின் குடும்பத்தினரும் சந்திக்க நேரிட்டதாம்.
இதனை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும், தந்தைக்கு சரிவர வேலை வாய்ப்பு இல்லாததால் அன்றாட அத்தியாவசிய செலவுகளுக்கே திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் நடத்தப்படுகிறது. அதில் கலந்துகொள்ள போன் வாங்க தந்தையிடம் பணம் இல்லாததை உணர்ந்த சிறவன், தனது முயற்சியில் பணம் ஈட்டி தனக்கும் தனது அக்காவிற்கும் மொபைல் வாங்க முடிவெடுத்தான்.
சிறுவனின் தாய் மற்றும் அக்காவின் உதவியோடு வீட்டில் டீ தயார் செய்து அருகாமையில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சைக்கிள் மூலம் விற்பனை செய்து வருகிறார். பொதுமக்கள் ஆர்வமுடன் சிறுவனிடம் டீ வாங்கி குடிக்கின்றனர். இதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தில் சிறிது சிறிதாக சேர்த்து வைத்து தானும் தனது அக்காவும் ஆன்லைன் படிப்பில் கலந்துகொள்ள புதிய மொபைல் போன் வாங்க முயற்சி செய்ததாக மாணவன் ராகுல் கூறினான்.
இதுமட்டுமன்றி சிறுவன் டீ விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தால் தற்போது தங்களுடைய குடும்ப செலவினை ஓரளவிற்கு ஈடுகட்ட முடிவதாக சிறுவனின் தாயார் சுமதி உருக்கமாக தெரிவித்தார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!