ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி மரணத்தை உறுதிபடுத்த முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான போருக்கு தலைமை தாங்கும் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்டீபன் டவுன்சென்ட் இதுதொடர்பாக விர்ஜினியாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாக்தாதி உயிரிழப்பு தொடர்பாக ஆதாரம் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார். பாக்தாதியை பிடித்து தருபவர்களுக்கு 161 கோடி ரூபாயை பரிசாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக, சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை கண்காணித்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.எஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏனெனில், பாக்தாதி மரணமடைந்ததாக ஏற்கனவே செய்திகள் பரவி வந்தன. கடந்த மாதம் வான்வழித் தாக்குதலில் பாக்தாதி உயிரிழந்ததாக ரஷ்யாவும் தெரிவித்திருந்தது. இதனிடையே, பாக்தாதி உயிரிழப்பை உறுதி செய்தோ, மறுப்பு தெரிவித்தோ ஐ.எஸ் அமைப்பின் ஊடககங்களில் இதுவரை செய்தி வெளியாகவில்லை. ஈராக்கில் மொசூல் நகரம் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மறுநாள் பாக்தாதி உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருப்பின், ஐ.எஸ் அமைப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்