தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தக்காளியின் விலை வழக்கத்திற்கு மாறாக தாறுமாறாக உயர்ந்து, ஒரு கிலோ 100ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக போதிய மழை இல்லாததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி சாகுபடி பொய்த்துப்போனது. இதனால் தக்காளியை பயிரிடாமல்
விவசாயிகள் மாற்றுப்பயிராக பச்சை மிளகாய், கத்திரிக்காய் உள்ளிட்டவைகளை பயிரிட்டனர். இதனால் தக்காளியின் வரத்து பெருமளவு குறைந்தது. தக்காளியின் வரத்து குறைந்ததை தொடர்ந்து, அதற்கான தேவை உயர்ந்ததை பயன்படுத்தி வியாபாரிகள் தற்போது தக்காளியை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது, 100க்கு மேல் பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பெங்களூர் ரக தக்காளி பல மாவட்டங்களில் விற்பனைக்கே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!