டி.ராஜேந்தர் தோல்வி: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேனாண்டாள் முரளி தேர்வு

டி.ராஜேந்தர் தோல்வி: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேனாண்டாள் முரளி தேர்வு
டி.ராஜேந்தர் தோல்வி: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேனாண்டாள் முரளி தேர்வு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்வாகியுள்ளார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, இயக்குநரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் ஆகியோர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும், பி.எல்.தேனப்பனும் இதில் போட்டியிட்டார். இதற்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 10 மணிக்கு தொடங்கியது.

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகளும், டி.ராஜேந்தர் 337 வாக்குகளும் பெற்றுள்ளனர்.பி.எல்.தேனப்பன் 87 வாக்குகள் பெற்றுள்ளார். டி.ராஜேந்திரை விட 220 வாக்குகள் அதிகம் பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்வாகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து துணைத்தலைவர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் டி.ஆர். அணியைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தனித்து போட்டியிட்ட கதிரேசனும் 120 வாக்குகளுடன் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com