இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது ஷமி ஆகியோரிடம் எச்சரிக்கையாகவே இருப்போம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கரே தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்க இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 27-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேட்டியளித்துள்ளார்.
அதில் "பும்ராவும்,முகமது ஷமியும் எத்தனை முக்கியமான பவுலர்கள் என்று எங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் எச்சரிக்கையாக இருப்போம். அதேவேளையில் எங்கள் அணியில் திறமையான பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். அவர்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. மேலும் டேவிட் வார்னர், பின்ச் ஆகியோர் ஏற்கெனவே இந்திய வேகப்பந்தை சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்" என்றார் அலெக்ஸ் கரே.
மேலும் "இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சஹால், ஜடேஜாவும் சிறப்பானவர்கள்தான். எங்கள் அணியின் பவுலர்களான கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஹேசல்வுட் ஆகியோர் எப்படி பந்துவீசப் போகிறார்கள் என்பதை காண ஆவலோடு இருக்கிறேன். இரு அணியிலும் சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அடிக்கடி விளையாடுகிறோம். அது இரு அணிக்கும் சாதகமான அம்சம்தான்" என்றார் அலெக்ஸ் கரே.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!