குண்டும், குழியுமாக இருந்த சாலையை தனி ஒரு ஆளாக செப்பனிட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் நகரின் பெரும்பாலான இடங்கள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதனைக்கண்ட கம்பம்பகுதி போக்குவரத்து காவலர் தாமரை மாணிக்கம், தனி ஆளாக மண்வெட்டி, ஜல்லி கற்கள் ஆகியவற்றைக்கொண்டு சாலையை சீரமைக்கத் தொடங்கினார். அவரைப்பார்த்த பொதுமக்கள் மாணிக்கத்திற்கு உதவ முன்வரவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இருப்பினும் மாணிக்கம் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து பணியைத் தொடர்ந்தார். 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையை சீரமைத்து பள்ளங்களை சமன் செய்தார். அவரின் இந்த நடவடிக்கையால் தற்போது வாகன ஓட்டிகள் எவ்வித சிரமமின்றி சாலைகளில் பயணித்து வருகின்றனர். காவலரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. காவலரின் சேவைக்காக வெகுமதி வழங்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்