சென்னை தியாகராய நகரில் தீ விபத்திற்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டட தரைத்தளத்தில் இருந்து மற்றொரு நகைப் பெட்டகம் மீட்கப்பட்டுள்ளது. தீவிபத்தினால் முற்றிலும் உருக்குலைந்து போன கட்டடத்தின் தரைத்தளத்தை இடிக்கும் பணியின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மே 30 ஆம் தேதி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் கட்டடம் முழுவதும் எரிந்து நாசமானது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்தக் கட்டடத்தை எந்தவித அசம்பாவிதமும் இல்லாத வண்ணம் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜா கட்டர் என்ற நவீன இயந்திரம் கொண்டு கட்டடம் முழுவதுமாக இடிக்கப்பட்டது. தற்போது இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
Loading More post
HDFC வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.13 கோடி வரவு எப்படி?- வங்கி அதிகாரிகள் விளக்கம்
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி