பூந்தமல்லியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 9 ஆடுகள் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி அடுத்த மேல்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவா இருவரும் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றனர். காலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் ஆடுகள் அனைத்தும் பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் அந்த பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மேய்ந்துவிட்டு வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.
அதேபோல் இன்று மதியம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மீண்டும் வீடு திரும்புவதற்காக பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே சாலையை கடந்தபோது அந்த வழியே வேகமாக வந்த கார் ஒன்று ஆடுகளின் மீது வேகமாக மோதியதில் ஒன்பது ஆடுகள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போயின.
ம.பி.யில் வேன் திரும்பும்போது விபத்து - 10 பேர் உயிரிழப்பு
இதையடுத்து ஆட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்து ஓடிவந்துள்ளனர். ஆடுகளைக் கொன்றுவிட்டு கார் நிற்காமல் சென்றிருக்கிறது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் அளித்ததின் பேரில் பூந்தமல்லி போலீசார் ஆடுகளை ஏற்றி சாகடித்து விட்டு நிற்காமல் சென்ற காரின் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!