"ராணுவ வீரர்களுக்காக விளக்கு ஏற்றுங்கள்" பிரதமர் மோடி

"ராணுவ வீரர்களுக்காக விளக்கு ஏற்றுங்கள்" பிரதமர் மோடி
"ராணுவ வீரர்களுக்காக விளக்கு ஏற்றுங்கள்" பிரதமர் மோடி

உயிரை பணயம் வைத்து நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு தீபாவளியன்று மக்கள் தத்தமது வீடுகளில் தீபம் ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நமது ராணுவத்தினரின் தியாகத்திற்கு ஈடுஇணை ஏதுமில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். அண்மையில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் விளக்கு ஏற்றுவதற்கான அழைப்பு விடுத்த குரல் பதிவையும் தன் ட்விட்டர் பதிவில் பிரதமர் இணைத்துள்ளார். பிரதமர் மோடி இந்தாண்டு தீபாவளியை ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். பிரதமருடன் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோரும் செல்ல உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com