தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து வழக்கமான அரசுப் பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளையும் தமிழக அரசு இயக்கியது. அதன்படி கடந்த 11ஆம் தேதி முதல் நேற்று வரை சென்னையில் 9 ஆயிரத்து 510 பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து 5 ஆயிரத்து 247 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்து 757 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையில் கோயம்பேடு, கே.கே.நகர், பூந்தமல்லி, தாம்பரம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் சென்றன. இந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறப்புப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாகும். சென்ற ஆண்டில், தீபாவளி சிறப்புப் பேருந்துகளில் 6 லட்சத்து 70ஆயிரம் பேர் பயணித்திருந்தனர்.
Loading More post
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?