பிரசவகால விடுப்புக்கு ஓகே சொன்ன பிசிசிஐ - முதல் டெஸ்ட் உடன் இந்தியா திரும்பும் விராட் கோலி

பிரசவகால விடுப்புக்கு ஓகே சொன்ன பிசிசிஐ - முதல் டெஸ்ட் உடன் இந்தியா திரும்பும் விராட் கோலி
பிரசவகால விடுப்புக்கு ஓகே சொன்ன பிசிசிஐ - முதல் டெஸ்ட் உடன் இந்தியா திரும்பும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

அண்மையில் கோலி தலைமையில் மூன்று பார்மெட்டுக்குமான அணியை அறிவித்தது பிசிசிஐ. மூன்று பார்மெட் அணிக்கும் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறார் கேப்டன் விராட் கோலி என பிசிசிஐ  தெரிவித்துள்ளது. பிரசவ சமயத்தில் மனைவியுடன் இருக்க வேண்டுமென ஏற்கனவே விராட் கோலி அனுமதி கோரியிருந்த நிலையில், அவரது பிரசவகால விடுப்புக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. 

அனுஷ்கா சர்மா - விராட் கோலி தம்பதிக்கு ஜனவரி மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்திலோ குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. விராட் கோலி இல்லாத கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு யார் கேப்டனாக செயல்படுவார் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்பதால் அவர் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com