தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து வேல் யாத்திரையை தொடங்கி திருச்செந்தூர் வரை செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், கடவுள் முருகனின் துணைகொண்டு வேல் யாத்திரையை தொடங்குவதாக கூறினார்.
மேலும் கையில் வேலுடன் சென்னை கோயம்பேட்டில் இருந்து ஏராளமானத் தொண்டர்களுடன் திருத்தணிக்கு அவர் புறப்பட்டார்.
சென்னையிலிருந்து புறப்பட்ட வேல் யாத்திரை தற்போது நசரத் பேட்டையைச் சென்றடைந்துள்ளது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த யாத்திரை தமிழகம் முழுவதும் தொடரும் என அறிவித்துள்ளார். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் யாத்திரையை நிறுத்த முற்பட்ட காவல்துறையினரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐந்து வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் உடன் நடந்து செல்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்