செஞ்சி அருகே 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர். சாரயம் காய்ச்சிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் மற்றும் நல்லான்பிள்ளை பெற்றாள் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார், செஞ்சியை அடுத்துள்ள போத்துவாய் மலைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்கு பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அதே இடத்தில் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கு இருந்த 30 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்பவர் மலைப்பகுதியில் சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயம் காய்ச்சியதாக சேட்டு மீது நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்