அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வாய்ப்பில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணூர் துறைமுகம் தனியார் மயமாக்கப்படாது. செய்யூர் நிலக்கரி சுரங்கத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். ஜிஎஸ்டி அமலானதால் நிலக்கரி கொள்முதல் விலை குறைந்துள்ளதால், நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி செலவும் குறைந்துள்ளது. சூரிய ஒளி மின்சாரம் மூலம் விவசாய மின் மோட்டார் பம்புகளை இயக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் தொடர்பான தமிழக அரசின் திட்ட பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கும் என கூறினார். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 2,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்குக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதே சமயத்தில் அணுஉலை மின்சாரத்தை கொடுப்பதில் மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார். அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் பியூஸ் கோயல் கூறினார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்