மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக நூறு அடியை எட்டியுள்ளது. கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து மற்றும் தமிழகம் - கர்நாடக எல்லையில் தீவிரமடைந்துள்ள பருவ மழை காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து வேகமாக அதிகரித்துவருகிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கொள்ளளவு 93.47 டிஎம்சி. நடப்பு ஆண்டில் முதல்முறையாக செப்டம்பர் 25 ஆம் தேதி 100 அடியை எட்டியது. பின்னர் அக்டோபர் 13 ஆம் தேதி 100 அடியை எட்டியது. அடுத்து 19 ஆம் தேதியன்று நீர்மட்டம் 99 அடியாக குறைந்தது.
தற்போது மூன்று நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தீவிரமடைந்த மழையால், மேட்டூர் அணை நீர்வரத்து மீண்டும் அதிகரித்துவருகிறது. பாசனத்துக்கு 9 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் திறப்பைவிட வரத்து அதிகமாக இருந்ததால், நேற்று (அக்டோபர் 24 ) மாலை அணையின் நீர்மட்டம் மூன்றாவது முறையாக 100 அடியை எட்டியது.
ரோட்டில் கிடந்த பையில் ரூ.1.50 லட்சம்... பாராட்டுக்குள்ளாகும் வியாபாரியின் நேர்மை
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!