Published : 08,Jul 2017 01:57 PM
புதியதலைமுறையின் செய்தி எதிரொலி: செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழங்கள் பறிமுதல்

ரசாயனம் செலுத்தி பழுக்க வைத்த வாழைப்பழங்களை கடலூர் உழவர்சந்தையில் உணவு பாதுகாப்புதுறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதிய தலைமுறையில் வெளியான செய்தியின் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரசாயனம் செலுத்தி பழுக்க வைத்த பழங்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.