கர்நாடகா மாநிலம், தொடர்ந்து பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய் ஒன்று வெள்ள நீரில் இருந்து தனது குட்டியை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொற்களில் நெகிழ்ச்சி மிக்க சொல் என்றால் அது நிச்சயம் தாய்மை என்பதாகத்தான் இருக்கும். எந்த உயிரினங்களாக இருந்தாலும் தாய் என்பது தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் தனது குட்டியை உயிரைக்கொடுத்து காப்பாற்றும் எத்தனையோ விலங்குகளை நாம் கண்கூடாகவே பார்த்திருப்போம்.
அந்த வகையில் கர்நாடகாவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் பல பகுதிகள் கடந்த வாரத்தில் பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலையெங்கும் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. அந்தந்த மாநிலங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#WATCH Karnataka: A female dog rescues her puppy and shifts it to a safer location in flood-affected Tarapur village of Vijayapura district. Several parts of the state are reeling under flood, triggered due to rainfall. (17.10.2020) pic.twitter.com/0BgWCl4kDq — ANI (@ANI) October 18, 2020
இந்நிலையில், கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டம், தரப்பூர் கிராமத்தில், நாய் ஒன்று தனது குட்டியை வாயில் பிடித்துக்கொண்டு, முழங்கால் ஆழமான நீர் வழியே கடந்து, நீர் இல்லாத இடத்திற்கு கொண்டு செல்கிறது. தனது உயிருக்கு ஆபத்து என்று கூட கருதாமல் தனது குட்டியை காப்பாற்றும் முயற்சியில் அந்த தாய் நாய் வெற்றி பெற்றுள்ளது. இச்சம்பவம் பார்ப்பவரின் அனைவர் மத்தியிலும் நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!