அறந்தாங்கி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 52 வயது மளிகைக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி அருகே மணமேல்குடி அக்ரஹாரம் தெருவில் மளிகைக் கடை நடத்தி வருபவர் முகமது ராவுத்தர். இவரது கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்க 9 வயது சிறுமி அடிக்கடி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சிறுமி மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு முகமது ராவுத்தர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. கடையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய சிறுமி அழுதவாறே வந்துள்ளார். அவரிடம் சிறுமியின் தாய் விசாரித்தபோது சிறுமி தனக்கு நடந்தவைகள் குறித்து தாயிடம் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவரது தாய் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முகமது ராவுத்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix