உயர்கல்வி நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா விழிப்புணர்வைக் கொண்டு செல்வதற்கு ஜன் அந்தோலன் என்கிற மக்கள் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள், சமூக வலைதளங்கள் என அனைத்துவகையான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபடவேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.
இதுபற்றிய அறிக்கையை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு செயலர் ரஜ்னிஷ் அனுப்பியுள்ளார். அதில், விழிப்புணர்வு பிரச்சாரத்தில் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணியவேண்டும். தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை தூய்மையாகக் கழுவுதல் ஆகிய மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கட்டாயம் கடைப்பிடிப்பேன் எனப் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடத்தப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினை முதல்வராக்க தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம் - கே.என்.நேரு
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?