திருப்பூரில் அசாம் மாநில பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்துள்ள உகாயனூர் பகுதியில் வேலை தேடி வந்த அசாம் மாநில பெண்ணை ஆறுபேர் கொண்ட கும்பல் முட்புதர் பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனைத்தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த மூன்று பேரை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜேஷ்குமார், தாமோதரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த இளந்தமிழனை பல்லடம் போலீசார் தேடிவந்த நிலையில் மதுரையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரை கைது செய்து அழைத்து வந்தனர்.
இதனையடுத்து பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஆய்விற்காக வந்த கோவை சரக டி.ஐ.ஜி நரேந்திரன் நாயர், அசாம் மாநில பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைதுசெய்த பல்லடம் மகளிர் காவல்நிலைய போலீசாருக்கும், தனிப்படையினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!