மகப்பேறுக்கு மருத்துவ காப்பீடு உண்டா? என்பது குறித்து விளக்குகிறார் காப்பீட்டு ஆலோசகர் சங்கர் நீதிமாணிக்கம்.
‘’காப்பீடு என்பது எதிர்பாராத நிகழ்வு ஏதாவது நமக்கு நடக்கையில் அதில் இருந்து மீளவும், சமாளிக்கவும் தரப்படும் இழப்பு ஆகும். முக்கியமாக எதிர்பாராத விபத்து மூலம் ஏற்படும் மருத்துவ செலவினம், மரணம், எதிர்பாராமல் நோய்வாய்ப்படுவதால் வரும் செலவினங்கள் போன்றவற்றிக்கு காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு அளிக்கின்றன.
ஆனால், மகப்பேறு என்பது எதிர்பாராமல் நடப்பது அல்லவே, மேலும் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடனேயே குழந்தை பிறப்பு நாளும் சொல்லிவிடும் வசதி இன்றைய மருத்துவத்தில் இருக்கிறது. எனவே மகப்பேறு என்பது எதிபாராத நிகழ்வு இல்லை. அதாவது காப்பீடு மொழியில் இது ஒரு முன்கூடியே இருக்கும் நிலை (Pre-existing illness or condition).
இப்படி pre-existing நோய்களுக்கு எல்லா காப்பீடு நிறுவனங்களும் மருத்துவக் காப்பீடு அளித்தாலும் அதற்கு என்று ஒரு காத்திருப்பு காலம் (Waiting period) நிர்ணயிக்கிறார்கள்.
இன்றைய சூழலில் மகப்பேறு மருத்துவ செலவுகள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. மேலும் சிசேரியன் சிகிச்சையும் மிக அதிக அளவில் நடக்கும் ஒன்றாக இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு சில காப்பீடு நிறுவனங்கள் மகபேறுக்கும் மருத்துவக் காப்பீடு அளிக்கிறது. அந்தந்த நிறுவனங்கள் நிர்ணயித்திருக்கும் காத்திருப்புக் காலத்திற்கு பிறகு மகப்பேறு மருத்துவ பாதுகாப்பு வழங்குகின்றன. (Coverage will start after waiting period). இந்த காத்திருப்புக்காலம் இரண்டு ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு ஆண்டுகள் என நிறுவனங்களை பொறுத்து மாறுகிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் இந்த காப்பீட்டில் இழப்பீடாக ரூபாய் 15000/- முதல் 50000/- வரை இழப்பீடு (claim) பெறும் வகையில் தங்களின் காப்பீட்டுத்திட்டங்களை வடிவமைத்து இருக்கிறார்கள்.
ஒரு சில நிறுவனங்கள் குறைந்ததாக ஒரு கோடிக்கு மருத்துவக் காப்பீடு எடுப்பவர்களுக்கு சுமார் இரண்டு லட்சம் வரை மகப்பேறு மருத்துவ காப்பீடு தருகிறது. ஒரு சில நிறுவனங்கள் வெளிநோயாளி (OPD) செலவினம் அளவிற்கு மட்டுமே இழப்பீடு வழங்குகிறது. முக்கியமாக எந்த நிறுவனமும் IVF சிகிச்சை பெற காப்பீடு அளிப்பது இல்லை.
மாற்றங்கள் எல்லா இடத்திலும் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. வரும்காலங்களில் இந்த மகப்பேறு மருத்துவக் காப்பீட்டுத்திட்டங்களிலும் மாற்றம் வரலாம். அப்போது IVF சிகிச்சைக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் திட்டம் வரலாம்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'