ஊரடங்கில் அதிக தளர்வு எதிரொலியாக அதிதீவிர தொற்று பரவல் ஏற்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தில் 5 கட்டத் தளர்வுகள் அளிக்கப்பட்டு, மக்கள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர். அனைத்து அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. சென்னையைப் பொருத்தவரை செப்டம்பர் 23 வரை சீராக இருந்த கொரோனா பாதிப்பு, அதன் பிறகு அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வேகத்துக்கு Super Spreading Event எனப்படும் அதிதீவிர தொற்று பரவல் தான் காரணம் என்கின்றனர் புள்ளியியலாளர்கள்.
உள்ளரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள், அலுவலகங்களில் கூட்டமாக அமர்ந்து வேலை செய்வது, உணவு உண்பது உள்ளிட்டவற்றால் Super Spreading Event காரணம் நிகழ்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
முகக்கவசம் அணிந்திருந்தாலும் ஒரு மீட்டர் இடைவெளியில் இருப்போருக்கு 5 முதல் 10 சதவிகிதம் தொற்று பரவுகிறது. உட்புற அரங்குகளில் 90 சதவிகிதம் வரை பரவுகிறது. இதைத் தடுக்க எளிய நடைமுறைகளைப் பின்பற்றினாலே போதும் என்கின்றனர் மருத்துவர்கள்.
குளிர்சாதன வசதி கொண்ட உள்ளரங்குகள் மற்றும் அலுவலகங்களில் அதிதீவிர தொற்று பரவல் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து அரசு கூடுதல் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Loading More post
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!