அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு அதிமுகவில் போரும் இல்லை, வாரும் இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்தார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற போட்டி முதல்வர் மற்றும் துணை முதல்வர் மத்தியில் நிலவி வருவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுக 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது என்ற சரித்திரத்தை பெற்றுள்ளதோடு 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் நடைபெறும் ஆலோசனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மூத்த அமைச்சர்கள், துணை முதலமைச்சர் ஆகியோரது வீட்டிற்கு மற்ற அமைச்சர்கள் செல்வது வழக்கம். அதிமுக தற்போது இரட்டை தலைமையோடு செயல்படுவதாக கூறிய அவர், முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அது நான்கு சுவர்களுக்குள் கழகத்தில் எடுக்கப்படும் முடிவு என்று கூறினார்.
தொடர்ந்து, சசிகலா வருகை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு கடந்த காலத்தை விட்டுவிட்டு நிகழ்காலத்தை பற்றி யோசியுங்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுகவில் போரும் நடக்கவில்லை, வாரும் நடக்கவில்லை என்று பதிலளித்தார்.
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'