சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தமிழகம் முழுவதும் தடை செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தில் பத்மநாபபுரம் திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதால், கழிவு நீர் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தார். கழிவு நீர் வெளியேறி, வருவதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கருப்பண்ணன், இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் ஏற்கனவே தாம் ஆலோசனை நடத்தியதாகத் குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
Loading More post
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்