வேளாண் சட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனுக்கு விவசாயத்தைப் பற்றி தெரியாதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தில் ஊழல், கால்வாய்கள் தூர்வாரும் பணிகளில் ஊழல், கிசான் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதால், தான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. தனக்கு விவசாயம் குறித்து எதுவுமே தெரியாது என முதல்வர் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்துச் சொல்ல வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவும், விவசாயிகளின் நலனில் அக்கறையும் இருந்தால் போதும்.
வேளாண் சட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனுக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாததா? எல்லாம் தனக்குத் தெரியும், தன்னை எதிர்ப்போர்க்கு எதுவும் தெரியாது என்றும் நினைப்பதும் பேசுவதும், ஆணவத்தின் அடையாளம், அழிவின் ஆரம்பம் என்ற ஆன்றோர் அறிவுரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணிப்பார்க்க வேண்டும்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி