பாலஸ்தீன விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பாகப் பேசப்படும்போதெல்லாம், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி உள்நாட்டில் எழுப்பப்படுகிறது. பாலஸ்தீனம் என்றொரு நாடு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இந்தியா, அதே நேரத்தில் இஸ்ரேலையும் நட்புப் பட்டியலிலேயே வைத்திருக்கிறது. இந்த நட்புறவு எத்தனை வலுவானது?
மதத்தின் அடிப்படையில் நாடுகள் உருவாக்கப்படக்கூடாது என்ற கொள்கையை தொடக்கத்தில் இருந்தே கடைப்பிடித்து வரும் நாடு இந்தியா. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு யூதர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடு உருவாக்கப்படுவதை தேசத்தந்தையான மகாத்மா காந்தியும் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் கடுமையாக எதிர்த்தனர்.
1947-இல் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டபோது, அதை எதிர்த்து வாக்களித்த மிகச்சில நாடுகளுள் ஒன்று இந்தியா. 1950-இல் இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தாலும், ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு இஸ்ரேலுடன் எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இந்திராகாந்தி பிரதமரான காலத்தில் இருந்துதான் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்துவதற்கான விதைகள் தூவப்பட்டதாகக் கருதப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான போர்களின்போது பல்வேறு வகையான உதவிகளை இஸ்ரேல் இந்தியாவுக்குச் செய்து வந்ததாகவும் கூறப்படுவதுண்டு. இதன் தொடர்ச்சியாக, 1992-ஆம் ஆண்டு இஸ்லாமிய மற்றும் இடதுசாரி அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேலுடன் முழுமையான உறவை ஏற்படுத்திக் கொண்டது இந்தியா. 1997-ஆம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பாத வெகுசில நாடுகளுள் இஸ்ரேலும் ஒன்று. இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே தலைவர்கள் பரஸ்பரம் பயணம் மேற்கொள்வது வழக்கமாகிவி்ட்டது. 2003-ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் இந்தியாவுக்கு வந்தார்.
இஸ்ரேலுக்கும் இந்தியாதான் மிகப்பெரிய சந்தை. பாகிஸ்தானும் சீனாவும் நெருங்குவதால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர்க்கவே இஸ்ரேலுடன் நெருங்குவதாக இந்தியத் தரப்பில் கூறப்படுகிறது. ஏவுகணைகள், படை விமானங்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றை இந்தியா வாங்கி வருவதுடன் கூட்டுப் போர்ப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக வர்த்தகம் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. விண்வெளி, சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளிலும் இந்தியாவும் இஸ்ரேலும் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருக்கின்றன.
சமகாலத்தில் மட்டுமல்லாமல் வரலாற்று ரீதியிலும் இஸ்ரேலுடன் தொடர்பு கொண்டிருக்கிறது இந்தியா. வடகிழக்கு மாநிலங்களில் வாழும் நே மெனசே பழங்குடிகள் யூத வம்சாவளியினராகக் கருதப்படுகின்றனர். யூத இன அழிப்பில் சற்றும் பாதிக்கப்படாத மக்கள் இவர்கள்தான் என்பதாலும் இஸ்ரேலுக்கு இந்தியா மீது சாதாரணமாகவே நட்புப் பார்வை உண்டு. இதனால், இஸ்ரேலைப் பொருத்தவரை, மிக நெருக்கமான நட்பு நாடு இந்தியாதான்.
Loading More post
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?