வயிற்றில் உள்ள குழந்தை என்ன பாலினம் என கண்டுபிடிப்பதற்காக மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது
உத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஏற்கெனவே 5 பெண் குழந்தைகளுக்கு தந்தையான பன்னலால் என்பவர், 6வதாக தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென்று நினைத்துள்ளார். மனைவியும் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா என தெரிந்துகொள்வதற்காக மனைவியின் வயிற்றை கிழித்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கூர்மையான ஆயுதத்தால் கிழித்ததில் 35 வயதான மனைவி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக கர்ப்பிணியின் குடும்பத்தினர் அவரை விரைவாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். கர்ப்பிணியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பன்னலால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
2020ம் ஆண்டு முடியும் தருவாயில் இருந்தாலும் இன்னமும் பெண் குழந்தைகள் மீதான வெறுப்பு பரவிக்கிடப்பதை இந்த சம்பவம் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி