நடிகர் விஜய் மாஸ்டர் படபிடிப்பின்போது நெய்வேலியில் பொதுமக்களுடன் எடுத்த செல்ஃபி இந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட செல்ஃபியாக புதிய சாதனை படைத்துள்ளது.
நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வந்தார். அப்படத்தின் படபிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் நடந்தபோது விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது, விஜய் நெய்வேலியில் பேருந்து ஒன்றின் மீது ஏறி நின்று மக்களுடன் கூலாக செல்ஃபி எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பெரும் வைரலானது.
இந்நிலையில், அந்தப் புகைப்படம்தான் தற்போது இந்திய நடிகர்களிலேயே அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட புகைப்படமாக புதிய சாதனையை படைத்துள்ளது. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்து வெளியிட்டுள்ளது. அதன்படி, இதற்கு முன்பு, நடிகர் ஷாருக்கான், மற்றும் அக்ஷய் குமார் புகைப்படங்கள்தான் இந்த சாதனையை பிடித்திருந்தன.
தற்போது விஜய்யின் செல்ஃபி புகைப்படம் அவர்களின் சாதனையை முறியடித்துள்ளது. இத்தகவலை சினிமா துறையினரும், விஜய் ரசிகர்களும் கொண்டாடி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்