நீச்சல் குளம் அருகே தூங்கிக்கொண்டிருந்த நபர் திடீரென கரடியைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் பகுதியில் உள்ள நீச்சல் குளம் ஒன்றின் அருகேயுள்ள இருக்கையில், மேத்தீவ் பீட் என்பவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது நீச்சல் குளத்திற்கு வெளியே உள்ள பகுதியில் அலைந்து கொண்டிருந்த கரடி ஒன்று, தாகம் ஏற்பட்டு நீச்சல் குளத்தின் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்தது. பின்னர் நீச்சல் குளத்தில் தேவையான அளவிற்கு அந்தக் கரடி தண்ணீர் பருகியது.
அதைத்தொடர்ந்து அங்கும் இங்குமாய் திரிந்த கரடி, உறங்கிக்கொண்டிருந்த மேத்தீவ் அருகே சென்று, அவரது காலை வருடியது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மேத்தீவ், கரடியின் வருடலால் மெல்ல கண் விழித்தார். அப்போது கரடியைக் கண்ட அவர் அதிர்ச்சியுடன் பதறினார். அவரின் பதற்றத்தை கண்ட கரடி அங்கிருந்து தலை தெறிக்க ஓடியது. உடனே மேத்தீவ் தனது செல்போனில் கரடியை படம்பிடித்தார். இந்த வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்