காங்கோ நாட்டின் சுரங்க கிணற்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 பேர் பலியாகியுள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ, தங்கம் உள்ளிட்ட கனிம வளங்கள் நிறைந்தது. இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சுரங்கங்களை அமைத்து தங்கத்தை வெட்டி எடுத்து வருகின்றன.
அந்த வகையில் காங்கோவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கனடா நிறுவனத்துக்கு சொந்தமான தங்க சுரங்கத்தில் நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதாகவும், அதற்கு மத்தியிலும் சுரங்கப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இந்த தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு தீவிர மீட்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கோர விபத்தில் 50 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
Loading More post
காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் 24 மணிநேரத்தில் சுட்டுக்கொலை
“நாடாளுமன்ற நடவடிக்கையில் சிபிஐ தலையிடுகிறது” - சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள்.. நகர மறுத்து அடம்பிடித்த ரூபாலி யானை.. நெகிழ்ச்சி சம்பவம்
டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ் தேர்வு - மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
’மோடிக்கு 17 கேள்விகளுடன் பேனர்கள்’.. 2வது முறையாக பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த கேசிஆர்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!