இந்தி எழுதவும் படிக்கவும் தெரியாத என்னுடைய காலம் 20 ஆண்டுகளாக நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இருந்து 3 மாவட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்ட திருச்சி சிவார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “சோதனைகளை எதிர்கொள்வதில் திமுக தனித்தன்மையோடு இருக்கும். எக்காரணத்தை முன்னிட்டும் அடிப்படை கடமைகளை செய்வதில் திமுக ஒருபோதும் தவறாது என்பதற்கு இந்த காணொலிக் பொதுக்குழுவும் சான்றாக உள்ளது.
வங்கிகளில் பிராந்திய மொழி பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை என்கிற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சரிதான். ஆம். அமைச்சர் சொல்லவில்லை. ஆனால், வங்கிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளின் பயன்பாடு இல்லாமல் இருப்பதை, வங்கிச் சலான் உள்ளிட்ட ஆதாரத்துடன் அனுப்பியுள்ளேன். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பதில் அனுப்பியுள்ளனர்.
இந்தி படிப்பதால் வளர்ச்சி என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இங்குள்ள பல மொழிகளைப் போல் இந்தியும் ஒரு மொழி. ஆனால் அந்த மொழியை மட்டும் திணித்து, மற்ற மொழிகளை ஆக்கிரமதித்தால் அதை எதிர்க்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. இந்த நாடு பன்முகத்தன்மையும் கூட்டாச்சித் தத்துவமும் கொண்ட நாடு. நான் 20 ஆண்டுகளாக டில்லியில் உள்ளேன். எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியாது. ஆனால் என் காலம் அங்கு நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்