கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமி மற்றும் அவரது தங்கையை கடத்திய இரண்டு வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே வெள்ளமோடி கிராமத்தை சேர்ந்த தொழிலாளியின் மனைவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்தார். அவரது 17 வயது மகள் மருத்துவமனையில் தங்கி தாயை கவனித்து வந்தார். அவர் மருத்துவமனைக்கு செல்வதற்காக நாகர்கோவில் அருகே கட்டையன்விளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயசுதன் என்பவரது ஆட்டோவை வாடகைக்கு பிடித்துள்ளனர்.
அப்போது 17 வயது சிறுமியுடன் ஜெயசுதனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜூலை 20ஆம் தேதி சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறுமியை ஆட்டோ டிரைவர் ஜெயசுதன் கடத்திச் சென்று விட்டதாக மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து ஜெயசுதனை பல்வேறு இடங்களிலும் போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமியின் தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் நடந்த ஓரிரு நாளிலேயே சிறுமியின் தங்கையை, வெள்ளமோடியை சேர்ந்த சித்தப்பா முறை உறவினரான தொழிலாளி அருண் என்ற ஐயப்பன் கடத்தி சென்று விட்டதாக குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்படி மகளிர் போலீசார் 2 வாலிபர்கள் மீதும் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இரண்டு பேரையும் மகளிர் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தேடி வந்தார்.
இந்நிலையில் தலைமறைவான இரண்டு பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர்களை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் ஜெயசுதனுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!