தாராபுரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காவலாளியை தாராபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தாராபுரம் அடுத்த மூலனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சானார்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி துரைசாமி. இவர் தனது மனைவி ராதாமணியுடன் வேலைக்கு சென்றிருந்தார். இதனால் இவர்களது மகள்(24) வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், இதையறிந்த அப்பகுதியில் வசித்துவரும் தனியார் நிறுவன காவலாளியான பழனிச்சாமி(50) துரைசாமியின் வீடு புகுந்து தூங்கிகொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய துரைசாமியின் மனைவி ராதாமணி தனது மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து விசாரணை செய்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை பெற்றோருடன் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வணிதாமணி, உதவி ஆய்வாளர் வேதவள்ளி ஆகியோர் சானார் பாளையம் பகுதிக்கு சென்று பழனிச்சாமியை கைது செய்து திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
Loading More post
HDFC வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.13 கோடி வரவு எப்படி?- வங்கி அதிகாரிகள் விளக்கம்
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி