நாகையில் மின்சாரம் தாக்கியதில், மகளின் கண்ணெதிரே தந்தை உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டம் போலகத்தைச் சேர்ந்தவர் பிலிப்தாஸ். இவர் நாகை மாவட்டம் செல்லூர் கிராமத்தில் உள்ள தனது மகள் ஜெசிந்தாமேரியை பார்ப்பதற்காக இன்று அவரது வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் வாசல் பகுதியில் இருந்த தென்னை மரத்தில் ஏறிய பிலிப்தாஸ், மரத்திலிருந்த தென்னங்கீற்றுகளை கத்தியினால் வெட்டி கொண்டிருந்தார். அப்போது தென்னை மரம் அருகே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரம் திடீரென்று பிலிப்தாஸ் மீது பாய்ந்தது.
இந்த சம்பவத்தில் பிலிப்தாஸ் தனது மகள் கண்ணெதிரிலேயே பரிதாபமாக தென்னை மட்டையின் இடையில் சிக்கிக்கொண்டு உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை தீயணைப்புத்துறை வீரர்கள் உயிரிழந்தவரின் உடலை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். தொடர்ந்து பிலிப்தாஸின் உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி